உங்கள் நண்பன் திலீபன்

உங்கள் நண்பன் திலீபன்
விதியை நம்பி மதியை இழக்காதே.

Saturday, October 23, 2010

சுதந்திர இந்தியா


சுதந்திர இந்தியா
அடிமைத் தளை
நம்மை ஒன்றாக கட்டி வைத்தது
சுதந்திரம் நம்மை
கட்டவிழ்த்து வேறுவேறாக பிரித்துவிட்டது

அன்று வெள்ளையனை வெளியேற்ற‌
நாம் ஒன்றினைந்திருந்தோம்
இன்று நாமே தனித்தனி
தீவுகள் ஆகிவிட்டோம்

வெள்ளையனை வெளியேற்ற
போராடிய நாமே இன்று
வெள்ளைக்காரர்கள் ஆகிவிட்டோம்

அடிமை என்ற தளையை
அகற்றிய நாமே
ஜாதி மதம் என்ற‌
விலங்கினை நமக்கு நாமே
பூட்டிக் கொண்டோம்

கிளிந்து கிட‌ந்த‌ இந்தியாவை
ஒன்றாக‌ தைத்த‌வ‌ன்
வெள்ளைக்கார‌ன்
அதை சுத‌ந்திர‌ம் என்ற‌
க‌த்த‌ரிக்கோலால் ம‌றுப‌டியும்
துண்டுக‌ளாக்கிய‌வ‌ன்
இந்திய‌ன்

No comments:

Post a Comment