
தமிழன் என்றொரு இனம் உண்டு,
தனியே அவர்க்கொரு குணம் உண்டு.
அமிர்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்.
கலைகள் யாவினும் வல்லவனாம்,
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்.
நிலைகொள் பற்பல அடையாளம்,
நிந்தனை இன்னும் உடையோனாம்.
மானம் பெரிதென உயிர் விடுவான்,
மற்றவர்க்காக துயர் படுவான்.
தானம் வாங்கிடக் கூசிடுவான்,
தருவது மேல் எனப் பேசிடுவான்.
சாதிகள் தொழிலால் உண்டெனினும்,
சமரசம் நாட்டினில் கண்டவனாம்.
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்.
மானம் பெரிதென உயிர் விடுவான்
No comments:
Post a Comment