தெருவில் கிடக்கும் தமிழன்
உங்கள் நண்பன் திலீபன்
Tuesday, January 1, 2013
Monday, November 29, 2010
தலைவா உன்னாலே தலைநிமிர்ந்தோம்
இதுவரை உலகம் காணாத தலைவரே எமது தமிழ் மக்களுக்கு கிடைத்த தலைவர், வேறு எந்த இனத்திற்கும் கிடைக்கா பொக்கிஷம். யார் யாரோ எல்லாம் தன்னைத் தானே தலைவன் என்று சொன்ன போது. உலகே வியந்து பார்க்கும் எம் தலைவர் சொன்ன ஒரு வாக்கியம், என்னை ஒரு பொழுதும் தலைவனாக நான் நினைத்ததில்லை, என் இனத்திற்கு என்னால் முடிந்த எனது கடமையை செய்கிறேன் என்று சொன்னவர், தன்னை எப்பொழுதும் ஒரு போராளியாகவே அறிமுகப் படுத்துபவர்.
எமது மக்கள் படும் துன்பம் தாங்காமல் விளையாடும் வயதிலே களமாடப் புறப்பட்டவர், களமாடப் புறப்படும் முதல் விளையாட்டுக்கு கூட ஒரு நண்பனையும் தள்ளி விடாதவர்;. மலரினும் மெல்லிய மனம் படைத்தவர், சாதுவாய் இருந்தவர் மிரண்டார் சுருண்டது கொடிய சிங்களம். போராடப் புறப்படும் கணமே தீர்க்க தரிசனமான முடிவை எடுத்தார்; எம் தலைவர்;, எவரையும் நம்பிப் பயன் இல்லை. தன் கையே தனக்குதவி என்று. தன் கையில் இருந்த மோதிரத்தை விற்றும் சிறுக சிறுக உண்டியலில் பணம் சேர்த்தும் வாங்கினார்; முதல் ஆயுதம்.
எமது எதிரியை விட துரோகியே முகவும் கொடியவன் என அன்றே முடிவெடுத்த தலைவர், முதல் முதல் களை எடுத்தது எமது இனத் துரோகியை. அன்றில் இருந்து சிறுக சிறுக தன்னோடு நண்பர்களையும் சேர்த்து சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார். பாதியில் வந்தவர்கள் பலர் பாதியிலே போக தான் கொண்ட லட்சியத்தில் உறுதியாய் நின்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் என் தனது அமைப்பிற்கு பெயர் சூட்டினார். அமைப்பில் இருப்பவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க தமது அமைப்புக்கென ஒழுக்க விதிகளையும் விதித்தார். தனது வாழ்வில் தான் ஒழுக்க சீலரகவே வாழ்கின்றார்.
எமது இன விடுதலைக்காக போராட வரும் போராளிகள் உருதியானவர்களாக இருக்க பயிற்சி கொடுத்து. அவர்களின் நெஞ்சில் விடுதலை வேட்கையை மேலும் மெருகூட்டினார். தாய்த் தமிழுக்காய் எக்கணமும் களப் பலியாக துணிந்த போராளிகளை உருவாக்கினார், களமாடத் துணிந்த ஒவ்வொரு நெஞ்சங்களின் கழுத்திலும் நஞ்சை அணிவித்து தானும் அணிந்துகொண்டார். விடுதலை அமைப்பின் ரகசியங்களைக் காக்கவும் கொடிய சிங்களத்தின் கொடிய சித்திரவதைகளில் இருந்து தம்மைக் காகவே நஞ்சை அணிந்தனர்.
பல வல்லாதிக்க சக்திகள் எமது போராட்டத்தை மழுங்கடிக்க நினைத்த போதும், எமது போராட்டப் பாதையை மற்ற எத்தனித்த போதும், தமிழ் மக்களின் விடிவுக்கான விடுதலைப் போரை விட வேறு எந்த வழியும் மக்களுக்கு விடிவைத் தராது என அன்றே தரிசனமான முடிவை எடுத்தார் தலைவர். வல்லாதிக்க சக்திகள் பல அழுத்தங்களைக் கொடுத்த போதும் , பல இடையூறுகளை விளைவித்த போதும் வளைந்து கொடுக்காமல் துணிந்து நின்றவர் எம் தலைவர். இதை பொறுக்காத அணிய சக்திகள் போராளி அமைப்புக்களை தூண்டிவிட்டு பிளவுகளை ஏற்ட்ப்படுத்தியது அப்போதும் கலங்காமல் களமாடினர் எம் தலைவர்.
எமது இரண்டாயிரம் விடுதலைப் புலிகளை அழிக்க இரண்டு இலட்சம் ராணுவத்தை அனுப்பியது இந்தியா. இரண்டு இலட்சம் ராணுவம் இரண்டு வருடங்கள் களமாடி தமது இரண்டாயிரம் ராணுவத்தை இழந்தபோதும் எதவும் முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது இந்திய ராணுவம்.
எமக்கென தனியான அரசாங்கத்தை அமைத்தார் எம் தலைவர். எமது தமிழ் ஈழத்தின் வளங்களை வளர்க்க
விவசாய திணைக்களம்,
எமது மக்களின் வாழ்வை முன்நெடுக்க தமிழீழ வைப்பகம்,
மக்களுக்கான கைத்தொழில் உதவி,
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தமிழீழ காவல்த் துறை,
தமிழீழ நீதி மன்றம் தமிழீழ சட்டக் கல்லூரி,
போக்கு வரத்து திணைக்களம்,
வனவளத்துறை,
கால் நடை வளர்ப்பு,
மீன் வளத் துறை,
ஆனையிறவு உப்பளம் என அனைத்து வழிகளிலும் ஈழத்தின் செல்வங்களை மக்களுக்கு பயன் உள்ளதாக மாற்றி ஈழத்தை வளர வைத்தார்.
காந்தரூபன் அறிவுச்சோலை,
செஞ்சோலை சிறுவர் இல்லம்,
முதியவர் காப்பகம்,
அமைத்து எம் பிஞ்சுகளையும், முதிர்ந்த எமது தாய் தந்தையரையும் கண்ணுக்குள் வைத்துப் பார்த்தார்.
எமது தலைவர் சக போராளிகளை அண்ணனாகவும் தம்பி யாகவும் தங்கையாகவும், பிள்ளைகளாகவும் பார்த்தார். ஒவ்வொருவரை தனது தாய் தந்தை பிள்ளைகளாகப் பார்த்தார், அவர்களின் விடுதலைக்காய் தனது தாய் தந்தையை பிரிந்து பல ஆண்டுகள் வாழ்ந்தார். உறங்கும் நேரம் கூட கண்களை மூடிக்கொண்டு விடுதலையை மட்டுமே சிந்தித்தார்.
உலகே எம்மை ஏமாற்றி வார்த்தைகளில் மாத்திரம் மனித உரிமை. சிறுவர் பாதுகாப்பு பேசிக்கொண்டு, சிங்களத்தின் கொடிய யுத்ததிற்கு துணை போனது. எமது மக்களை சிங்களத்தோடு சேர்ந்து கொன்றொழித்தது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி புலியாய்ப் பாய்ந்த எமது தலைமை பதுங்கியது. பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என கொட்டம் அடித்து எமது மக்களைக் கொண்றொளித்த சிங்களம் எஞ்சி இருந்த மக்களைக் கொள்ள முடியாமல் தவித்தது, சரணடைய போகின்றோம் என சர்வதேசத்திடம் சொல்லிச் சென்றவர்களை ஏமாற்றி சமாதான பறவைகளைக் கொன்றது. மக்களைக் காக்க வேறு வழி இன்றி ரத்தம் கொதித்த போதும் மௌனம் காத்தது எமது தலைமை.
மௌனம் காக்கும் தலைமை உறங்கவில்லை. மௌனித்த துப்பாக்கிகள் மரணிக்கவில்லை, எமது தலைமையின் வழிகாட்டலுக்கு இன்றும் காத்திருக்கிறது எமது படை. விடுதலை பெரும் நாள் வரும். சாதாரன பிறப்புக்களே அழியும் எமது தலைவர் ஓர் அவதாரம் அவதாரங்கள் அழிவதில்லை. புலம் பெயர் தமிழர்களே புறப்படுங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் மீண்டும் புத்துயிருடன் போராடத் தயாராகுங்கள்.
Saturday, November 27, 2010
தம்பி நீ...
நேதாஜி தீட்டிய வீரம்...
மண்டேலா தியாகத்தின் தீரம்...
மாவோ நிகழ்த்திய புரட்சி...
எடிசன் செய்த ஆராய்ச்சி..
சேகுவேரா புரிந்த போர்...
சாக்ரடீஸ் பொழிந்த தத்துவம்..
புக்க்லேயின் முதல் துப்பாக்கி...
காஸ்ட்ரோ நடத்தும் ஆட்சி...
மார்ட்டின் லூதர் கண்ட கனவு...
பகத்சிங் காட்டிய கலகம்...
நெருதாவின் விடுதலைக்கவிதை...
பாப் மார்லே பாடிய பாடல்...
பெரியார் சொன்ன சமூக நீதி..
எங்கள் குலசூரியனே...பிரபாகரா...
நீ வாழ... என் ஆயுள் குறைய கடவது....
Friday, November 26, 2010
மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே! தத்தித் தவழ்ந்து தரணியெல்லாம் வலம் வந்த காலத்தில் தாயவள் கண்ட கனவுகள் எத்தனை! உங்கள் தாயவள் கண்ட கனவுகள் எத்தனை! பட்டு வேட்டிகட்டி பாவாடை தாவணி போட்டு பவனியெல்லாம் வலம் வரும் இந்தப் பருவ காலத்திலே மணமகன் மணமகளாகி மாலைகள் பல சூடி பிள்ளைச் செல்வங்கள் பலபெற்று பேரும் புகழோடும் - வாழ்வீர்கள் என்று. பெற்றார் உற்றார் உறவினர்கள் காத்திருந்த வேளையில் தனிப் பெருமை எமக்கு வேண்டாம் தங்கத் தலைவன் - தானையிலே தமிழ் தாயகத்தின் இறமைகாக்க தனித் தமிழீழம் மீட்க! எடுத்தீர்களே அன்று கைகளில் ஆயுதம் எடுத்தீர்களே அன்று கைகளில் ஆயுதம் வீரர்கள் நீங்களைய்யா! மாவீரர்கள் நீங்களைய்யா! வெற்றிகள் பல தந்து வீறுகொண்டு எழுந்ததெல்லாம் வீணாகப் போகவில்லை எம் செல்வங்களே வீணாகப் - போகவில்லை. வீறுகொண்டு எழுந்துள்ளோம் - நாங்கள் விடியலைத் தேடி வீறுகொண்டு எழுந்துள்ளோம். இனியும் நாம் பொறுத்திருந்தால்! நாம் இனியும் பொறுத்திருந்தால் தமிழர்கள் நாங்கள் என்றும் தமிழ் எங்கள் தாய் - மொழியென்றும் சொல்ல தகுதி அற்றவர்கள் ஆகிவிடுவோம் நாங்கள் தகுதியற்றவர்கள் - ஆகிவிடுவோம். பொறுத்தார் அரசாள்வார் என்றார்கள் முன்னோர்கள்! பொறுத்தேன் பொறுத்தேன் உங்கள் பெருமைகூற கையில் - பேனா எடுக்க பேதைகள் நாங்களைய்யா! வெறும் கோழைகள் ஆகிவிட்டோம் பேதைகள் நாங்களைய்யா! வெறும் கோழைகள் ஆகிவிட்டோம். தாமதித்து விட்டோம் நாங்கள் தாமதித்து விட்டோமைய்யா! எம்மை தடைசெய்த நேரத்தில் தாமதித்து விட்டோம். தம் இனம் காக்க தனித் தமிழீழம் மீட்க தன் சொந்தமண்ணில் போரிடுதல் தவறென்று தடை செய்தார்களே எம்மை எம் உறவுகள் உங்களை - பயங்கரவாதிகளென்று! தாமதித்து விட்டோமைய்யா தாமதித்துவிட்டோம் நாங்கள்! தட்டி இது தவறென்று சொல்வேண்டிய நேரத்தில - தாமதித்துவிட்டோம். இனியும் பொறுப்போமா! நாம் இனியும் பொறுப்போமா! பொங்கி எழுந்துவிட்டோமைய்யா நாங்கள் பொங்கியெழுந்து விட்டோம்! ஊங்கள் கனவுகள் நினைவாகும் நேரமிது அதை நாம் ஓவ்வொரு வரும் உறுதியுடன் கூறவேண்டிய நேரமிது! போரிட்டு வெல்லமுடியாத உங்களை எரிகுண்டு கொண்டு சூறைபிடித்து பல சித்திரைவதைகள் செய்து அழித்தானே!- மகிந்தா. இதுதான் போரின் வெற்றியாம். இதுதான் கயவர் போரின் வெற்றியாம். முற்பத்துமூன்று நாடுகளுடன் சேர்ந்து முடவனவன் செய்த சூழ்ச்சிப்போரில் வீறுகொண்ட - புலிகளாய். போரிட்டு வெல்வோமென்று பொங்கி எழுந்து- பல புலமைகள் தந்ததெல்லாம புலத்தில் நாம் வாழ்ந்தாலும் உடனுக்குடன் அறிந்தோமைய்யா. புன்னகை பூத்துனின்ற எம்முகம்இ புத்துணர்வு பெறுமுன்னே எரிகுண்டுகளையும் நச்சு வாயுகளையும் வீசி! கயவனவன் எங்கள் கனவுகள் கற்பனைகள் உங்களின் கதை முடித்தானோ!! முறக்க முடியுமாஇ மகிந்த ஆட்சியை - இல்லை மன்னிக்கத்தான் முடியுமா? மண்டை ஓடுகள்தான் அவனிற்கு மாலையாக போகின்றது. கொடுங்கோலன் ஆட்சியில் இப்படியொரு கொடுமைநடக்குமென்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! நமக்கு நல்லதெல்லாம் செய்வேனென்று கூறி நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டான்! நாசமாகப் போகின்றான்இ அவன் நாசமாகப் போகின்றான்! கொட்டும் மழையினிலும் கடும் குளிர் பனித் தூறலிலும் கேட்ட நின்றதெல்லாம் எமக்கொரு உரிமைதானே! பெற்றுத் தருவோமென்றுதானே பேச்சுவார்த்தைகளுக்கு - இழுத்தார்கள். சொந்த இனத்தின் விடியலிற்காய் சொந்த மண்ணிற்காய் - போரிடுதல் பயங்கரவாதம் என்றார்களே! பெற்ற இந்தப் பெயர் நீக்க பெரும்பாடு பட்டீர்களே பேணி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்ன! பேணி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்ன! வெற்;றியின் விளிம்பில் நின்றவர்கள் நீங்களய்யா! வெற்றியின் விளிம்பில் நின்றவர்கள் நீய்களய்யா! வீணாய் போனவர்களின் பேச்சுவார்த்தையின் சூழ்ச்சியினால் - கிடைத்ததிந்த பேரிழப்பு இனியும் நாம் பொறுக்கமாட்டோம்! இனியும் நாம் பொறுக்கமாட்டோம்! பொங்கி எழுந்திடுவோம் தனித் தமிழீழம் மீட்போம் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தனி - தமிழீழம் மீட்போம். புலிகளின் தாகம் புலம்பெயர் தமிழ்மக்களின் தாகம் தமிழீழத் தாயகம்தமிழீழத் தாயகம்!
தீலீபன் ராஜா
99940 18068
Saturday, October 23, 2010
தமிழே நீ வாழ்க!!
தமிழே நீ வாழ்க!!
அறத்துடன் மறம் கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே
அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.
காசி ஆனந்தன் நறுக்குகள்.
இலக்கியம் "களத்தில் நிற்கிறேன் என் இலக்கியத்தில் அழகில்லை என்கிறாய்! தோரணம் கட்டும் தொழிலோ எனக்கு? வாளில்- அழகு தேடாதே.. கூர்மை பார்: புத்துயிர் "போராளிகள் செத்து கொண்டிருக்கும் மண் என்கிறார்கள். என் மண்ணை. திருத்தினேன்- போராளிகள் பிறந்து கொண்டிருக்கும் மண் உடைப்பு "சொல்கிறார்கள் கிளியின் கூண்டை திறந்து விடு: முரண் படுகிறேன். உடைத்து விடு: உலக அமைதி மனித நேயம் பேசின அணுகுண்டுகள் புறாக்களை பறக்க விட்டன கழுகுகள் போராடிக் கொண்டிருக்கிறது அமைதி" அரண் என் வலக்கையின் ஐந்து விரல்கள் உண்ணவும் எழுதவும் வணங்கவும் மட்டுமல்ல அறையவும்... நாற்காலி இங்கே வேறுபாடு அதிகம் இல்லை. நாற்காலிக்கும் கட்டிலுக்கும் வீடு தூங்க கட்டில். நாடு தூங்க நாற்காலி... | ||
|
தமிழன்
தமிழன் என்றொரு இனம் உண்டு,
தனியே அவர்க்கொரு குணம் உண்டு.
அமிர்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்.
கலைகள் யாவினும் வல்லவனாம்,
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்.
நிலைகொள் பற்பல அடையாளம்,
நிந்தனை இன்னும் உடையோனாம்.
மானம் பெரிதென உயிர் விடுவான்,
மற்றவர்க்காக துயர் படுவான்.
தானம் வாங்கிடக் கூசிடுவான்,
தருவது மேல் எனப் பேசிடுவான்.
சாதிகள் தொழிலால் உண்டெனினும்,
சமரசம் நாட்டினில் கண்டவனாம்.
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறை குறையாமல் பண்ணினவன்.
மானம் பெரிதென உயிர் விடுவான்
Subscribe to:
Posts (Atom)