
தேசமே இது நல்ல இலக்கு
திரும்பவும் திரும்பவும் பெண்மையை குதறு.
யுத்த காலத்தில் உண்மைதான்,
முதலில் காயப்படுவதெனினும்,
முற்றிலும் காயப்படுவதும் பெண்மை..
பட்டியலிட்டு காட்டுவது வீண்
பின்னும் பெயர் வரிசைகள் நீள்கையில்
பெண்ணின் இடம் எதுவென தேடினால்
மேலும் மேலும் மலகுழிகளே நாறும்,
பெண்ணாளும் தேசமிதில்
பெண்களை வேட்டைநாய்கள் குதறும்.
பிய்ந்து போன பால் முலையாள்
தன் பிஞ்சை தேடி கதறி அழுகிறாள்
பிறகும் பிய்க்கிறார், குதறுகிறார்,
பேயென கூடித்தின்கின்றார்
கடப்பாரை குறிகளால்
பிளந்தது போதாதென்று
பெண்ணின் பிறப்புறுப்பில்
வெடிகுண்டை சொருகுகிறார்
பீரங்கி கொண்டொரு தேசத்தின் ஆன்மாவை பிளந்தது போலிது இல்லையா?
பெண்ணாளும் தேசமே
பால் முலைகளை பிய்தது குதறத்தான்
வேட்டை நாய்களை பயிற்றுவியா ?
மனுக்குல நாகரிகத்தை ஈன்ற வாசலை நோக்கித்தான் உன் பீரங்கி குறி வைக்குமா?
தேசமே இது நல்ல நோக்கு..
பிஞ்சென்றாலும் தாய் என்றாலும்
பெண் குறியை வேட்டை பொருளாக்கு..
பெண்மை வாழ்கவென்று பாடு.
பெண்ணாய் பிறந்தவள் மீதே உன் நாய்களை ஏவு..
பெண்மை வெல்கவென்று கை கொட்டியாடு ..
பிறகும் பிறகும் அதையே பிய்த்து குதறு..
தேசத்திற்கு இது நல்ல இலக்கு
அதுவும் பெண்ணாளும் தேசத்திற்கு ...
இந்த கவிதை சந்திரிக்கா ஆட்சியின் பொது எழுத பட்டது சோனியா ஆட்சிக்கும் பொருந்துகின்றது வெட்கப்பட வேண்டிய விஷயம்...
No comments:
Post a Comment