ஆரத் தழுவி அடிமனத்தைத் தொடுகின்ற
செந்தமிழே திருவாய் மலர்ந்திடுவாய்
நாடு நகரிடை வாழும் மக்களிடை
நெடு நாளாய் வீற்றிருக்கும் பைந்தமிலே
வீடு வளவின்றி வீதியோரங்களில் வாழ்கின்ற
தமிழினத்தின் விம்மலினை சுமந்த தாய் மொழியே
உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நாதிஎதுவுமின்றி
பாடாய்ப்படுகின்ற பாவித் தமிழ் இனத்தை பார்த்தாயா
தமிழ் இனத்தின் பெருநிலமாம் வன்னியே அங்கே
சிங்கள இனவெறியின் குண்டுகளால் சிதறிட்டே
அங்கிருந்த தமிழரெல்லாம் ஐயோ என்று கதறி ஓடினரே
குண்டுபட்டு தமிழினமே அழிந்திட்ட நேரத்தில்
மீதியிருந்த தமிழினமோ முட்கம்பி வேலிகளில் தவிக்கிறதே
எம்மவரை காப்பார்கள் மேலைநாடுகள் என்று
புலம்பெயர் தமிழரெல்லாம் வீதியிலே இறங்கினோமே
கடைசியிலே தமிழினத்தின் புதை குழியையும் காணலையே
தமிழ் இனத்தை அழித்திட்ட காடையருக்கு எம் சக உறவுகளே
பொன்னாடை என்று பன்னாடை போத்தி வீரவாழ்த்துக் கூறி வந்தனரே
எம் தொப்புள்க்கொடி உறவென்று கூறிடும் எம் சக இனமே வீதியிலே நிற்கிறதே
எம் இனத்தின் தலைவரென்று தன்னைத்தானே கூறிடும் எங்கள் ஐயா
உன் காலத்தில் ஈழத்தமிழினம் கண்ட சோதனைகள் என்றுமே நாம் மறவோம்
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று ஒரு கவிஞன் கூறினான்
அந்தத்தமிழினமே சின்னாபின்னமாகி கிடக்கிறது பார்த்தாயா
தமிழினத்தின் வேதனையை தீர்த்திடவே
பொங்கி எழுந்திடுவோம் புலத்துத் தமிழரெல்லாம்
முட்கம்பி வேலிகளை உடைத்தெறிய புறப்படுவோம்
எங்கள் தன்மானத்தமிழினத்தை காத்திடப் புறப்படுவோம்
விடிவானம் தெரிகிறது தமிழீழம் மலரத்தான் போகிறது
எம் இனத்தின் நெடுந்துயரம் களையத்தான் போகிறது
காற்றே நீ கனக்காதே காலம் எம் கையில்
கயவனவன் கதிகலங்கி ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை
அதுவரை நாங்கள் சர்வதேச தலைவர்களின் மெளனத்தை கலைத்திடுவோம்
ஈழத்தமிழினமே எழுந்திடு தமிழீழம் காணும் வரை எழுந்திடு!!!
No comments:
Post a Comment