உங்கள் நண்பன் திலீபன்

உங்கள் நண்பன் திலீபன்
விதியை நம்பி மதியை இழக்காதே.

Friday, May 28, 2010

தமிழனின் அகதி வாழ்க்கை.

தமிழனின் அகதி வாழ்க்கை.



தமிழன் அகதியாய் வந்து
அவதியில் வாழ்கிறான்
தூரதேசம் சஞ்சரிக்கும்
பறவை ஒன்று
தன் தாய்நாடு
திரும்பும் நிலைதான்....

ஒவ்வொரு
தாய்நில தமிழனின்
வெளிநாட்டு வருகையும்

மடிகின்ற மரங்கள் எல்லாம்
மனக் கவலையுடன் இறப்பதில்லை
ஆனால்......

தமிழனாகிய நம்முடய நிலை?
தமிழன் எப்போது நிலையாகுவது?

எட்டு திசையிலும்
திக்கு திக்காக
வாழ்கின்ற தமிழன்
எப்போது ஒன்று கூடுவது?
காலம் பதில் சொல்லுமா?

காலத்திற்காக
காத்திருந்தது போதும் தமிழா!
விழித்திடு! எழுந்திடு!

காலத்தின் கையில்
நாம் இல்லை
நம்முடைய கையில்தான்
காலம் உள்ளது.

எழுந்திடு தமிழா
வெற்றி நடை போட
எழுந்திடு.

No comments:

Post a Comment