உங்கள் நண்பன் திலீபன்

உங்கள் நண்பன் திலீபன்
விதியை நம்பி மதியை இழக்காதே.

Friday, November 26, 2010


மாவீரர் நீங்களே மறப்போமா நாங்களே! தத்தித் தவழ்ந்து தரணியெல்லாம் வலம் வந்த காலத்தில் தாயவள் கண்ட கனவுகள் எத்தனை! உங்கள் தாயவள் கண்ட கனவுகள் எத்தனை! பட்டு வேட்டிகட்டி பாவாடை தாவணி போட்டு பவனியெல்லாம் வலம் வரும் இந்தப் பருவ காலத்திலே மணமகன் மணமகளாகி மாலைகள் பல சூடி பிள்ளைச் செல்வங்கள் பலபெற்று பேரும் புகழோடும் - வாழ்வீர்கள் என்று. பெற்றார் உற்றார் உறவினர்கள் காத்திருந்த வேளையில் தனிப் பெருமை எமக்கு வேண்டாம் தங்கத் தலைவன் - தானையிலே தமிழ் தாயகத்தின் இறமைகாக்க தனித் தமிழீழம் மீட்க! எடுத்தீர்களே அன்று கைகளில் ஆயுதம் எடுத்தீர்களே அன்று கைகளில் ஆயுதம் வீரர்கள் நீங்களைய்யா! மாவீரர்கள் நீங்களைய்யா! வெற்றிகள் பல தந்து வீறுகொண்டு எழுந்ததெல்லாம் வீணாகப் போகவில்லை எம் செல்வங்களே வீணாகப் - போகவில்லை. வீறுகொண்டு எழுந்துள்ளோம் - நாங்கள் விடியலைத் தேடி வீறுகொண்டு எழுந்துள்ளோம். இனியும் நாம் பொறுத்திருந்தால்! நாம் இனியும் பொறுத்திருந்தால் தமிழர்கள் நாங்கள் என்றும் தமிழ் எங்கள் தாய் - மொழியென்றும் சொல்ல தகுதி அற்றவர்கள் ஆகிவிடுவோம் நாங்கள் தகுதியற்றவர்கள் - ஆகிவிடுவோம். பொறுத்தார் அரசாள்வார் என்றார்கள் முன்னோர்கள்! பொறுத்தேன் பொறுத்தேன் உங்கள் பெருமைகூற கையில் - பேனா எடுக்க பேதைகள் நாங்களைய்யா! வெறும் கோழைகள் ஆகிவிட்டோம் பேதைகள் நாங்களைய்யா! வெறும் கோழைகள் ஆகிவிட்டோம். தாமதித்து விட்டோம் நாங்கள் தாமதித்து விட்டோமைய்யா! எம்மை தடைசெய்த நேரத்தில் தாமதித்து விட்டோம். தம் இனம் காக்க தனித் தமிழீழம் மீட்க தன் சொந்தமண்ணில் போரிடுதல் தவறென்று தடை செய்தார்களே எம்மை எம் உறவுகள் உங்களை - பயங்கரவாதிகளென்று! தாமதித்து விட்டோமைய்யா தாமதித்துவிட்டோம் நாங்கள்! தட்டி இது தவறென்று சொல்வேண்டிய நேரத்தில - தாமதித்துவிட்டோம். இனியும் பொறுப்போமா! நாம் இனியும் பொறுப்போமா! பொங்கி எழுந்துவிட்டோமைய்யா நாங்கள் பொங்கியெழுந்து விட்டோம்! ஊங்கள் கனவுகள் நினைவாகும் நேரமிது அதை நாம் ஓவ்வொரு வரும் உறுதியுடன் கூறவேண்டிய நேரமிது! போரிட்டு வெல்லமுடியாத உங்களை எரிகுண்டு கொண்டு சூறைபிடித்து பல சித்திரைவதைகள் செய்து அழித்தானே!- மகிந்தா. இதுதான் போரின் வெற்றியாம். இதுதான் கயவர் போரின் வெற்றியாம். முற்பத்துமூன்று நாடுகளுடன் சேர்ந்து முடவனவன் செய்த சூழ்ச்சிப்போரில் வீறுகொண்ட - புலிகளாய். போரிட்டு வெல்வோமென்று பொங்கி எழுந்து- பல புலமைகள் தந்ததெல்லாம புலத்தில் நாம் வாழ்ந்தாலும் உடனுக்குடன் அறிந்தோமைய்யா. புன்னகை பூத்துனின்ற எம்முகம்இ புத்துணர்வு பெறுமுன்னே எரிகுண்டுகளையும் நச்சு வாயுகளையும் வீசி! கயவனவன் எங்கள் கனவுகள் கற்பனைகள் உங்களின் கதை முடித்தானோ!! முறக்க முடியுமாஇ மகிந்த ஆட்சியை - இல்லை மன்னிக்கத்தான் முடியுமா? மண்டை ஓடுகள்தான் அவனிற்கு மாலையாக போகின்றது. கொடுங்கோலன் ஆட்சியில் இப்படியொரு கொடுமைநடக்குமென்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை! நமக்கு நல்லதெல்லாம் செய்வேனென்று கூறி நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டான்! நாசமாகப் போகின்றான்இ அவன் நாசமாகப் போகின்றான்! கொட்டும் மழையினிலும் கடும் குளிர் பனித் தூறலிலும் கேட்ட நின்றதெல்லாம் எமக்கொரு உரிமைதானே! பெற்றுத் தருவோமென்றுதானே பேச்சுவார்த்தைகளுக்கு - இழுத்தார்கள். சொந்த இனத்தின் விடியலிற்காய் சொந்த மண்ணிற்காய் - போரிடுதல் பயங்கரவாதம் என்றார்களே! பெற்ற இந்தப் பெயர் நீக்க பெரும்பாடு பட்டீர்களே பேணி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்ன! பேணி வந்ததெல்லாம் வீணாகப் போனதென்ன! வெற்;றியின் விளிம்பில் நின்றவர்கள் நீங்களய்யா! வெற்றியின் விளிம்பில் நின்றவர்கள் நீய்களய்யா! வீணாய் போனவர்களின் பேச்சுவார்த்தையின் சூழ்ச்சியினால் - கிடைத்ததிந்த பேரிழப்பு இனியும் நாம் பொறுக்கமாட்டோம்! இனியும் நாம் பொறுக்கமாட்டோம்! பொங்கி எழுந்திடுவோம் தனித் தமிழீழம் மீட்போம் சுதந்திரமும் இறையாண்மையும் கொண்ட தனி - தமிழீழம் மீட்போம். புலிகளின் தாகம் புலம்பெயர் தமிழ்மக்களின் தாகம் தமிழீழத் தாயகம்தமிழீழத் தாயகம்!

தீலீபன் ராஜா
99940 18068

No comments:

Post a Comment