
இடி இடித்தால் தான்
வெளிச்சம் மின்னலாக
வெளி வரும்
வானம் சிவந்தால் தான்
பூமிக்கு விடியல் கிடைக்கும்
வலி எடுத்தால் தான்
குழந்தை பூமியில் தவழும்
புரட்சி நடந்தால் தான்
பூமியில் சுதந்திரம் கிடைக்கும்......
உயிர் இழந்த சுதந்திர போராட்ட வீரர்கள்
காய்ந்து விழும் சருகல்ல
நிலத்தில் விழும் விதைகள்
வீணே வான் சிந்தும் நீர் அல்ல
பல பயிர்கள்
மண்ணை துளைத்துக் கொண்டு
வெளியே வரக் காரணமான
மழை நீர்
No comments:
Post a Comment