உங்கள் நண்பன் திலீபன்

உங்கள் நண்பன் திலீபன்
விதியை நம்பி மதியை இழக்காதே.

Sunday, March 28, 2010

அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்!

கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,

செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற
எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை..

தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது
கொள்கைகளையும்,லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான்,
தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும்
நினைக்கவில்லை.

வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி
பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப்
போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து,
பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.

வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்
பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான
எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை
நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.

ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள்
தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ
திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.

எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“
கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.

பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத
பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ?


சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள்
துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.

இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்குவகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலகசெல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !

மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில்,நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து
கொண்டிருக்கையில்,பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில்
விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை
காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.

ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.
அண்ணா..

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததற்கும் கருணாநிதியின் ஆலோசனைதான் காரணம்: பழ.நெடுமாறன்

தமிழர் தேசிய இயக்கத்தலைவர் திரு.பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய மூன்றாவது அணி மக்கள் தயார் கட்சிகள் தயாரா? என்ற நூலின் வெளியீட்டுவிழா ஞாயிறு 28-3-10 அன்று மாலை மதுரையில் நடைபெற்றது. மதுரை மாமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.எம்.ஆர.மாணிக்கம் தலைமையில், திரு.ச.பிச்சை கணபதி வரவேற்க, மதுரை காமராசர் பலகலைக்கழக பொருளாதார பிரிவு முன்னாள் தலைவர் திரு.கு.வேலன் நூலை வெளியிட மணியம்மையார் மழலையர் பள்ளி தாளாளர் திரு.வரதராசன் பெற்றுக்கொண்டார். ”மண்மொழி” ராசேந்திர சோழன் நூலாய்வு செய்தார். மருத்துவர் போ.மு.செல்வம், சி.சி.சாமி, கா.பரந்தாமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் நூலாசிரியர் திரு.பழ.நெடுமாறன் ஏற்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, ”திராவிட இயக்க ஆட்சிகள் மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கிய பின்னர்தான் தமிழகத்தின், தமிழினத்தின் வீழ்ச்சி தொடங்கியது. இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது திராவிடக்கட்சிகள் மத்தியில் அங்கம் வகிக்காத போதுதான், இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுத உதவிகள் உட்பட எல்லா உதவிகளும் செய்யப்பட்டன. 1969ல திமுக, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சஞ்சீவ் ரெட்டிக்கு எதிராக, இந்திராகாந்தியின் பேச்சைக்கேட்டுக்கொண்டு வி.வி.கிரிக்கு ஆதரவளித்து வெற்றி பெறச்செய்தது ஒரு அரசியல் தவறாகும். காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக,காங்கிரசுடன் அரசியல் உறவு கொண்டது பெரும்தவறு. அதே காங்கிரஸ் கட்சி திமுக ஆட்சியை கலைத்தது. நெருக்கடிகாலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மிசாவில் கைதாகி அவதிப்பட்டனர்.
பின்னர் அதே காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு “நேருவின் மகளே வருக!நிலையான ஆட்சி தருக!”என்றுகூறி தவறுசெய்தது.மத்தியில் ஆளும் கட்சிகளுக்கு பல்லக்குத்தூக்க திராவிடக்கட்சிகள் போட்டிபோடுவது இன்றுவரை தொடர்கிறது.மத்தியில் அங்கம  வகித்ததினால்,தமிழக உரிமைப்பிரச்சனைகள் கொஞ்சமாவது குறைந்துள்ளதா?முலைப்பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல், சேது சமுத்திரம் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லையே? தங்களை மட்டுமே வளர்த்துக்கொள்ள மத்திய அரசில் அங்கம  வகித்துள்ளன. இப்போது பணபலத்தை நம்பி ஆட்சியில் அமரமுடியும் எனக்கருதி, தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்து, கட்சிக்கும் குடும்பத்துக்கும் சொத்துக்களைச்சேர்க்கின்றன.
மணல், மலை, காடுகள், கனிம வளங்கள், ஏரிகள், கண்மாய்கள், கடற்கரைப்பரப்பு என அனைத்து வளங்களும் சூறையாடப்படுகின்றன. திராவிடக்கட்சிகளின் நாற்பது ஆண்டுகாலத்தில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்துக்கும் கேடுதான்  அதிகம். தமிழகமுதல்வரிடம் ஆலோசனை கேட்டுத்தான், மத்திய அரசு எதையும் செய்யும் என சமீபத்தில் புதிய சட்டமன்ற கட்டிடத்தை திறந்துவைத்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதிலிருந்து, இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்ததற்கும் கருணாநிதியின் ஆலோசனைதான் காரணம் என்பது அப்பட்டமான உண்மை. எனவே பிரச்சனைகளின் அடிப்படையில் மக்கள் போராட தயாராகவேண்டும்.அப்போது அரசு பயப்படும் என்பதற்கு, மதுரை யானைமலை பிரச்சனையில் அரசு பின்வாங்கியது உதாரணம். திராவிடக்கட்சிகளான, திமுக-அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் சக்தியை மக்கள் துணையுடன் உருவாக்க வேண்டியதற்கான ஆயத்த நூல்தான் இது” என்று கூறினார்.

Saturday, March 6, 2010

உலகப் பந்தில் தமிழீழம்


நாம் எவ்வளவு தியாகங்கள் செய்கிறோம் என்பது அல்ல முக்கியம். அத் தியாகங்கள் யாருக்கு சேவை செய்கின்றன என்பதுதான் முக்கியம்’

1980 களின் பிற்பகுதியில் கைக்குக் கிடைத்த புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இவ்வாக்கியங்களைப் படித்த ஞாபகம். இது ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய புத்தகமாக இருக்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29ம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இந்திய இராணுவம் அமைதி காக்கும் படை எனும் பெயரில் தமிழீழ மண்ணில் நிலை கொண்டிருந்த காலத்தில்தான் இந்தப் புத்தகம் வெளியாகியிருந்தது.

நாம் செய்யும் தியாகங்கள் எமக்குச் சேவை செய்ய வேண்டும். அவை அந்நிய சக்திகளின் நலன்களுக்கு சேவை செய்பவையாக அமைந்து விடக்கூடாது என இம் முன்னுரை சுட்டி நின்றது.

எமது தியாகங்கள் எமக்குரிய சேவையினைப் புரிந்தவாறு ஏனையோருக்கும் சேவை புரியுமாயின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பரந்த மனப்பான்மையுடன் இதனை ஏற்றுக் கொள்ளும் பண்பு தமிழர் சமூகத்திடம் உண்டு.

ஆனால் எமது அளப்பரிய தியாகங்கள் ஏனைய சக்திகளின் நலன்கள் என்ற பூதத்தினால் விழுங்கப்படுமாயின் அதனை எவ்வாறுதான் சகித்துக் கொள்ள முடியும்?

இதேசமயம், பூதம் விழுங்குவதற்கு வாய்ப்புக்களைக் கொடுத்து விட்டு, விழுங்கிய பூதத்தின் வாய்க்குள்ளோ, வயிற்றுக்குள்ளோ நின்று ‘ஐயோ! எம்மைப் பூதம் விழுங்கி விட்டதே’ என்று அவலக்குரல் எழுப்புவதோ அல்லது ஆத்திரத்துடன் உறுமுவதோ என்ன பயனைத்தான் தந்து விட முடியும்?

தனது குஞ்சுகளைக் கொத்திச் செல்ல முயலும் பருந்திடமிருந்து அவற்றைப் பாதுகாக்கப் போராடும் தாய்க்கோழி; போலத்தான் வல்லரசுப் பருந்துகளையும் வல்லூறுகளையும் எதிர்த்துப் போராடும் சிறிய தேசங்களின் நிலையும் இருக்கும்.

இப் போராட்டத்தில் குஞ்சுகளைப் பாதுகாப்பதுதான் தாய்க்கோழியின் முதற்குறி. பருந்துக்கு ஏற்படுத்தும் சேதம் அல்ல. பல வேளைகளில் ஒரிரு குஞ்சுகளைப் பறிகொடுத்த போதும் ஏனைய குஞ்சுகளைத் தாய்க்கோழி எவ்வாறாயினும் பாதுகாத்து விடும். ஆர்ப்பரித்தெழுந்து போராடி, தனது இறக்கைகளால் குஞ்சுகளைப் பாதுகாத்து, பெரும் குரல் எழுப்பி மனிதர்களைத் துணைக்கழைத்து, பருந்தினைத் துரத்தி விடத் தாய்க்கோழி போராடும் விதம் இருக்கிறதே – இது சிறிய தேசங்களுக்கு தாய்க்கோழி கற்றுத் தரும் ஒரு இராணுவ, அரசியல், இராஜதந்திரப் பாடம்.

பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்த்ததை நிஜவாழ்வில் நாம் பார்த்ததில்லை. ஆனால் சர்வதேச அரசியலில் பருந்தும் தாய்க்கோழியும் கை கோர்ப்பதும் நடக்கும்.

தமிழீழத் தேசத்தின் சர்வதேசப் பரிமாணம் ஒரு வகையில் தாய்க்கோழியின் நிலைதான்.

தமது நலன்களுக்காக எமது நலன்களைப் பறித்துக் கொள்ள முயன்ற அனைத்துலகச் சக்திகளுடன்தான் தனது நலன்களுக்காக தமிழீழ தேசம் மோத வேண்டியிருந்தது. அதே சமயம் உறவும் வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

முள்ளிவாய்க்காலில் எமக்கு விழுந்த அடி, சிங்கம் அடித்த அடி மட்டுமல்ல. உலகப்பூதம் அடித்த அடியும் கூட.

சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் உலகை எவ்வாறு தன்வசப்படுத்த முடிந்தது? நாம் ஏன் தனித்து விடப்பட்டோம்?

உலகமெங்கும் வாழும் 80 மில்லியன் தமிழர்களை விட, 18 மில்லியன் சிங்களவர்கள் ஏன் உலகுக்கு முக்கியமாய்ப் போனார்கள்?

ஏன் எம்மால் நாம் கட்டி வளர்த்த நடைமுறை அரசைப் பாதுகாக்க முடியாமல் போனது? எமது விடுதலை இயக்கம் ஏன் முள்ளிவாய்க்காலில் மூச்சிழந்து போனது?

இதற்கெல்லாம் விரிந்த பரிமாணத்தில் உலகப்பந்தைப் புரட்டியும்தான் பதில் தேட வேண்டியுள்ளது. இதற்கு உலகப்பந்தில் தமிழீழத்தைப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி பிற்பகல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தளபதி கிட்டு, யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திலீபன் உள்ளடங்கலான விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமைக் குழுவினர் இந்திய இராணுவ விமானத்தில் பலாலி விமானத்தளத்தை வந்தடைகிறார்கள்.

இவ்வாறு வந்தடையும் இவர்களை களத்தில் விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையாவின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதுதான் ஏற்பாடு.

இந்த நிகழ்வு சுதுமலையில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் நடுப்பகுதியில் சுதுமலையில் வைத்துத்தான், இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பின் பேரில் இவர்களை இந்தியாவின் வானூர்தி ஏற்றிச் சென்றது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகளால், பிரபாகரன் புதுடில்லியில் அசோகா விடுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரு தகவலும் பரவியிருந்தது.

இச் சமயம், ஒப்பந்தம் கையெழுத்தாகி இந்திய இராணுவம் அமைதிகாக்கும் படையாக வந்திறங்கத் தொடங்கியிருந்தது.

தலைவர் திரும்பி வரும்வரை இந்திய இராணுவத்துடன் ஒத்துழைக்க மாத்தையா மறுத்து விட்டார்.

‘எங்கு வைத்து ஏற்றிச் சென்றீர்களோ அந்த இடத்தில் வைத்தே தலைவரை எம்மிடம் ஒப்படையுங்கள். அதன் பிறகு பேசுவோம்’ எனத் தீர்க்கமாகக் கூறிவிட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் பிரதித் தலைவர் எனும் பொறுப்பு முன்னர் இருக்கவில்லை. இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களுக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டு, தமிழீழ மண்ணை விட்டுப் புறப்படும் போதே பிரபாகரன் மாத்தையாவை பிரதித்தலைவராக நியமிக்கிறார்.

சில வேளைகளில் திரும்பிவர முடியாமல் போகலாம் என அவரது உள்ளுணர்வு கூறிக் கொண்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தியாவின் அழுத்தங்களில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காகவே 1987 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இரகசியமாகப் படகு மூலம் தமிழ்நாட்டிலிருந்து பிரபாகரன் தமிழீழம் வந்திருந்தார். ஆனால் இந்தியா இவரை விடவில்லை.

தனது யுத்த விமானங்கள் மூலம் உணவு வீசும் ‘ஒப்பிறேசன் பூமாலை’ எனும் மென் இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவைப் பணிய வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இந்தியா தீர்மானித்தது. ஈழத் தமிழரின் முதன்மை விடுதலை இயக்கமாக இருந்த விடுதலைப் புலிகளுக்கு அதனைத் தெரிவித்து இவ்வொப்பந்தத்தை பின்பற்றுமாறு அறிவுறுத்த முனைந்தது. இதற்காகப் பிரபாகரன் ராஜீவ் காந்திக்குத் தேவைப்பட்டார்.

இந்தியாவின் அழைப்பை ஏற்றுச் சென்றால் தன்மீது மிகப் பெரிய அழுத்தம் வரும் என்பதும், போகாவிட்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும். விடுதலைப்புலிகள் இந்தியாவை நிராகரிப்பதை என்ன காரணத்துக்காகவும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தமிழ் மக்கள் அப்போது இருக்கவில்லை. களநிலையும் சாதகமாக அமையவில்லை.

‘ஒப்பிறேசன் லிபரேசன்’ எனும் பெயரில் வடமராட்சி ஆக்கிரமிப்பினை சிறிலங்காப்படைகள் மேற்கொண்டிருந்தன. நெல்லியடி இராணுவ முகாம் மீதான மில்லரின் தற்கொலைத் தாக்குதலுடன் கூடிய எதிர்த்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியிருந்தாலும்கூட சிறிலங்காவின் இராணுவபலம் மேலோங்கியிருந்த நிலை. இச் சூழலில், இந்தியாவின் கோபத்திற்கு ஆளாவதனைத் தவிர்க்க, இந்தியாவின் அழைப்பை ஏற்பதென்ற முடிவைப் பிரபாகரன் எடுக்கிறார். மாத்தையாவினைப் பிரதித் தலைவராக அறிவிக்கிறார்.

இந்தியாவில் நடந்த பேரங்களும் மாத்தையாவின் இறுக்கமான நிலைப்பாடும் இணைந்து தொழிற்பட பிரபாகரனை மீண்டும் தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கும் முடிவை இந்தியா எடுக்கிறது. இப் பின்னணியிலேயே இவர்கள் இந்திய இராணுவ விமானத்தில் பலாலிப் படைத்தளத்திற்கு வந்திறங்குகின்றனர்.

சுதுமலையில் பிரபாகரன்

பலாலித் தளத்திலிருந்து பிரபாகரன் சுதுமலைக்கு வந்து சேரும் பாதையின் இரு மருங்கும் விடுதலைப் புலிப் போராளிகள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றனர். இப் பாதைப் பகுதியில் ஊரடங்கு உத்தரவும் விடுதலைப் புலிகளால் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனுதிப்பத்திரமின்றி போராளிகள் உட்பட எவரும் நடமாட முடியாது. பொட்டம்மான் கூட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் தடுத்து நிறுத்தப்படுகிறார். இப்படி ஏற்பாடுகள் இறுக்கமாக இருந்தன.

பிரபாகரனின் பாதுகாப்புக்காகவே இந்த எற்பாடுகள் என்று கூறப்பட்டாலும் விடுதலைப் புலிகளின் முன்னெச்சரிக்கையை, போராளிகள் பலத்தை இந்திய இராணுவத்திற்கு உணர்த்த வேண்டும் என்பதும் புலிகளின் நோக்கமாக இருந்தது. பாதுகாப்புக் கவச வாகனங்களுக்குள் பிரபாகரனையும் ஏனையோரையும் உள்ளிருத்திக் கொண்டுவந்து சுதுமலையில் வைத்து புலிகளிடம் ஒப்படைத்தது இந்திய இராணுவம்.

தளம் திரும்பிய பிரபாகரன் அன்று மாலை முக்கியமான பொறுப்பாளர்களையும் போராளிகளையும் சந்திக்கிறார். இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுக்களையும் அங்கு நடைபெற்ற விடயங்களையும் சுருக்கமாக எடுத்துக்கூறுகிறார்.

‘எனக்கு முன்னால் இருக்கும் தெரிவு வளைவதா அல்லது முறிவதா என்பதே. நான் வளைவது என்ற முடிவை எடுத்துள்ளேன்’.

என இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் இணைந்து போக தான் எடுத்திருந்த முடிவைக் கூறுகிறார்.

பல போராளிகளால் இம்முடிவினை ஜீரணிக்க முடியவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தம்தான் தற்போது பேசப்படும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படை. இது தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை எந்த வகையிலும் எட்ட முடியாத வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் முக்கியமாக இவ்வொப்பந்தத்தின்படி விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங்களைக் கையளித்து, சிறிலங்கா வழங்கும் பொதுமன்னிப்பை ஏற்று அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டியிருந்தது.

இவை எல்லாவற்றிற்கும் பிரபாகரன் ஒப்புக் கொண்டார்.

சுதுமலையில் நடைபெற்ற கூட்டத்தில் ’இந்த ஒப்பந்தத்தை இனவாதப் பூதம் விழுங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைத்து எமது ஆயுதங்களைக் கையளிக்கிறோம்’ என 1987 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ம் நாள் பிரகடனப்படுத்தியபோது கூடியிருந்த மக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஓகஸ்ட் 5ம் திகதி ஆயுதங்களும் பலாலித் தளத்தில் வைத்து கையளிக்கப்படுகின்றன. ஜே. ஆரின் பொதுமன்னிப்புப் பட்டயத்தை யோகி பெற்றுக் கொள்கிறார்.

இம்முடிவை ஜீரணிக்க முடியாத மூத்த போராளி ஒருவர் பிரபாகரனிடம் செல்கிறார். மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இந்த முடிவோடு தன்னால் ஒத்துப் போக முடியவில்லை எனக் கூறுகிறார். அரசியல்ரீதியாகவும் உணர்வுரீதியாகவும் பல்வேறு காரணங்களை எடுத்துச் சொல்கிறார்.

பிரபாகரன் பொறுமையாக அதனைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ‘அப்ப என்ன செய்யலாம்? நீ சொல்லு’ என உரிமையுடன் சொல்கிறார்.

‘எனக்கு வழி தெரியேலை. ஆனால் இந்த ஒப்பந்தத்தோடை சேந்து போக என்ரை மனம் இடம் தரேலை’ என அந்த மூத்த போராளி சொல்ல பிரபாகரன் சொல்கிறார்.

‘நீ இதை என்னிட்டை சொல்லலாம். நான் உதை மக்களிட்டை சொல்லேலாது. நான் ஒரு முடிவை எடுக்க வேணும்’.

இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலம், தமிழீழவிடுதலைப் போராட்டம் புவிசார் பிராந்திய அரசியல் அழுத்தங்களை உச்சமாகச் சந்தித்த காலகட்டம்.

இவ் அங்கத்தின் நோக்கம் இக்காலகட்ட நிகழ்வுகளை விபரிப்பதல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அனைத்துலகப் பரிமாணங்களை, இப் பரிமாணங்கள் இப் போராட்டத்திற்கு வழங்கிய சவால்களை, முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்படுவதற்கு இப் பரிமாணங்கள் வழங்கிய பங்களிப்பை, இப் பரிமாணங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கி விடாமல் பாதுகாப்பதில் நாம் அடைந்த தோல்வியை பற்றி ஆராய்வதே இவ் அங்கத்தின் நோக்கம்.

பிரபாகரன் எவ்வித விட்டுக் கொடுப்புக்களுமின்றி இலக்கில் உறுதியாக இருந்தமையால் அனைத்துலமும் சேர்ந்து அழித்து விட்டது எனக் கூறுவது மிக எளிமைப்படுத்தப்பட்ட விளக்கமாக இருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் திணிக்கப்பட்டபோது பல போராளிகளின் அதிர்ப்தியையும் மீறி பிரபாகரனால் வளைந்து போக முடிந்திருக்கிறது. பின்னர் கடந்து போகவும் முடிந்திருக்கிறது.

ஒரு போராட்டத் தலைவன், போராட்ட இயக்கம் வளைந்து போவதற்கும் பின்னர் கடந்து போவதற்கும் அதற்குரிய அகப்புறச் சூழலும், வெளியும் (space) இருக்க வேண்டும். அல்லது உருவாக்கப்பட வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் வளைந்து போக முடிந்த பிரபாகரனால் பின்னர் முடியாமல் போனது ஏன்?

தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் உலக ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் போராட்டத்தின் போக்கை, அதன் வெற்றியின் சாத்தியப்பாட்டை எவ்வாறு பாதித்தன?

இவ்வுலக ஒழுங்கில் எமது போராட்டத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் எம்மைத் தடுத்தவை எவை?

இவை எல்லாம் குறித்து நாம் ஆராய வேண்டியுள்ளது.

Thursday, March 4, 2010

போராட்டம் & வீரர்கள்


இடி இடித்தால் தான்
வெளிச்சம் மின்னலாக
வெளி வரும்
வானம் சிவந்தால் தான்
பூமிக்கு விடியல் கிடைக்கும்
வலி எடுத்தால் தான்
குழந்தை பூமியில் தவழும்
புரட்சி நடந்தால் தான்
பூமியில் சுதந்திரம் கிடைக்கும்......

உயிர் இழந்த சுதந்திர போராட்ட வீரர்கள்
காய்ந்து விழும் சருகல்ல
நிலத்தில் விழும் விதைகள்
வீணே வான் சிந்தும் நீர் அல்ல
பல பயிர்கள்
மண்ணை துளைத்துக் கொண்டு
வெளியே வரக் காரணமான
மழை நீர்

சில தமிழனின் மாற்றம்

வெளிநாட்டில்
தமிழனுக்கு
தமிழில்
பேச வெட்கம்

நாகரீகம்
முத்திப் போய்
நடை உடையிலை
மாற்றம்

பிள்ளைகளின்
பெயரைக் கேட்டால்
தமிழனோ
எனத் தடுமாற்றம்

தமிழ் இனத்தின்
தலை எழுத்தில்
இப்படி ஏன்
மாற்றம்

இன்னும் இரண்டு
தலை முறையில்
இவனின் நிலை
இங்கு சோகம்

அரசாங்க
இலவசப் பணத்தில்
ஆடம்பர
ஆட்டம்

அதை எடுத்து
சிலதுகள்
இங்கு சூது
ஆட்டம்

அகதியாகி
வந்தும் இங்கே
சண்டியர்
கூட்டம்


ஏனடா தமிழா
உனக்கு
இப்பவே
இந்த மாற்றம்

வீழ்ந்த தோழர்களை புதைப்போம். மீண்டும் போருக்கு செல்வோம்.

மீண்டும் போருக்கு செல்வோம் -கண்மணி.

சீனத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட மார்க்சிய ஆசான் தோழர் மாவோ வெறும் போராளி அல்ல. ஒரு தலைச்சிறந்த கவிஞர், இலக்கியவாதி. எப்பொழுதும் கலகலப்பாக மக்களை வைத்திருப்பதில் மகா திறமை வாய்ந்தவர். நமது தேசியத் தலைவரும் சற்றேறக்குறைய அதேபோன்றே குணம் வாய்ந்தவராக இருந்தார். பேசும் போதெல்லாம் சிரிக்க சிரிக்க பேசும் ஒரு ஆற்றல் அந்த மாபெரும் போராளியின் மனதில் சம்மனம் இட்டு அமர்ந்திருந்தது. எதை எதிர்கொள்ளும்போதும் துணிவோடும், திட்டமிட்டும், தளராமலும் செய்யும் தேசிய தலைவர் ஒரு குழந்தைத் தனமான மனம் கொண்டவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருக்குள்ளும் இலக்கியம் கரைபுரண்டு ஓடியது. அவர் உலகிலுள்ள புத்தகங்களை எல்லாம் தேடி எடுத்து படித்தார். அந்த தேடல்தான் அவரை இந்த உலக மக்களை எல்லாம் தேட வைத்தது. நாம் தோழர் மாவோ பற்றி சொல்லிக் கொண்டிருந்தோம் அல்லவா? தோழர் மாவோ, கதைகள், கவிதைகள், நாடகங்கள் மூலம் சீன விவசாய கம்யூனிஸ்ட் தோழர்களை தம்முடைய சொல்லாற்றலால் ஒருங்கிணைத்து தட்டி எழுப்பினார். ஒருமுறை தோழர் மாவோ தமது விவசாய தோழர்களிடம் ஒரு கதை கூறினார்.

''சீனாவில் ஒரு கிராமத்தின் அருகே ஒரு பெரிய மலை இருந்தது. அந்த மலைக்குப் பின்னால் அழகிய, ஆராவாரத்தோடு ஓடும் ஒரு நதி மிகச் சிறப்பாக, ரம்மியமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி நீரின் தேவை கிராமத்திற்கு மிக மிக அவசியமானதாக இருந்தபோதும், அந்த நதியை கிராமத்திற்குள் விடாமல் மலை தடுத்து நின்றது. ஒரு முதியவர் எப்படியாகிலும் அந்த மலையை தகர்த்து நதிநீரை கிராமத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று செயல்படத் தொடங்கினார்.

தமது கிராமத்திற்கு தடையாக இருக்கும் அந்த மலையை தகர்த்தெறிய, தாம் முயற்சி செய்ய துவங்கினார். தம் கிராமத்தின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் அந்த மலையை உளியால் தினம்தினம் உடைக்க தொடங்கினார். காலையில் செல்லும் அந்த முதியவர் இரவு வரை தமது பணியை இடைவிடாமல் தொடர்ந்தார். இதை போகும், வரும் வழிப்போக்கர்கள் நின்று நிதானித்து அவரைப் பார்த்து கேலிப் பேசிவிட்டு செல்வது நாள்தோறும் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தது. சிலர் அந்த முதியவரிடம், கிழவா! நீ என்ன செய்கிறாய்? என்று நக்கலாக கேட்பதும், அதற்கு அந்த கிழவர் அமைதியாக இருப்பதும் சில நேரங்களில் பதிலளிப்பதுமாக இருந்தார். ஒவ்வொருமுறையும் அவர் சொல்வார், ''நான் இந்த மலையை உடைத்து நதியை என் கிராமத்திற்கு கொண்டுவரப் போகிறேன்" என்று.

இது அவரிடம் கேள்வி கேட்கும் பார்வையாளர்களுக்கு பரிகாசமாய் தோன்றியது. அவர்கள் அந்த முதியவரின் வார்த்தையைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். கிழவா! மலை எவ்வளவு பெரியது. இதை உடைக்கும்வரை நீ உயிரோடு இருப்பாயா? என்று அந்த முதியவரைப் பார்த்து அவர்கள் பெரும் அறிவாளிகள் போல் கேள்வியினை தொடுத்தார்கள். அதற்கு அந்த முதியவர் சொன்னார், ''நான் உயிரோடு இருக்கும்வரை இந்த மலையை உடைப்பேன், எனக்குப் பிறகு என் மகன் உடைப்பான். அவனுக்குப் பின் என் பேரனும், கொள்ளுப்பேரனும் தொடர்வார்கள். இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் நாங்கள் வென்றேத் தீருவோம். ஒருநாள் இந்த மலை உடைத்தெறியப்படும்" என்று நெஞ்சுயர்த்தி, கம்பீரமாய் பதிலுரைத்தார்.

இதை வானத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவதைகள், மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள். முதியவரின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் உள்ளார்ந்து நேசித்து அந்த மலையை தேவதைகள் அப்படியே தூக்கி வேறு இடத்தில் நிறுத்தினார்கள். நதி ஆராவாரத்தோடு அந்த கிராமத்திற்குள் புதுப்புனலாய் பாயத் தொடங்கியது".

கதையை இங்கு நிறுத்திய மாவோ இந்த கிராமிய கதையில் வரும் கிழவன் செய்யும் வேலையைத் தான் நாம் செய்கிறோம் என்று பதிலுரைத்தார். நெடிய மலைகள் பொடியாகும். இருமார்ந்த சிகரங்கள் தகரும். புதுவெள்ளம் பாய்ந்து வரும். இந்த மகத்தான உண்மையை மிக எளிய கதையால் புரிய வைத்த மாவோ நம்மிடம் சொல்கிறார், நமக்கான நாடு அமையப்போகிறது. அந்த பணியை தேசிய தலைவர் துவக்கி வைத்தார். அது அவருடைய தலைமையிலேயே நிகழும். அந்த தேவதைகளைப் போல காலம் தமிழீழத்தை மீட்டு, தமிழர் வாழ்விலே புதுப்புனலாய், பொன்னருவியாய், தேன்தென்றலாய், தெம்மாங்குப்பாடலாய், நம் உள்ளங்களை தாலாட்டப் போகிறது. அந்த காலம் மிக மிக அருகில் தான் இருக்கிறது. ஆனால் இந்த நிலையை எட்ட நாம் நமது கடந்தகால நிகழ்வுகளை பின்னோட்டமாய் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு இந்த நேரமெல்லாம் நம்முடைய துயரின் எல்லை கடந்திருந்தது. எமது மக்கள் உடல் சிதறி ஆங்காங்கே இரைந்து கிடந்தார்கள். இது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆதாரப்பூர்வமாக செய்தியாக வந்திருக்கிறது. ஐ.நா.வில் முன்னாள் செய்தித் தொடர்பாளர் அதிர்ச்சி நிறைந்த இத்தகவலை அள்ளித் தெளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில், ''சிங்கள பேரினவாத அரசு, உலக நாடுகளை தமது சதி நிறைந்த திட்டத்தால் தவறாக வழிநடத்தியது. உலக நாடுகளிடம் சிங்கள பாசிச அரசு பெரும் பொய்களை கட்டவிழ்த்துள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார்". 14 வருடங்களாக ஐ.நா. சபையில் பணியாற்றிய கோர்டன் வைஸ் தமது பதவியை விட்டு விலகியப் பின் அளித்த நேர்க்காணலில், நமது நெஞ்சங்களை பதறச் செய்யும் செய்திகளால் நிரப்பியிருக்கிறார். இறுதிக்கட்ட சமர் என்று சிங்கள பாசிச அரசு அறிவித்து நடத்திய இன அழித்தொழிப்பில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டதை அவர் உறுதி செய்திருக்கிறார்.

சிங்கள பேரினவாத அரசும், பார்ப்பனிய இந்திய அரசும் உலக பேராதிக்க அரசுகளும் ஒன்றிணைந்து அழித்தொழித்த தமிழின மக்களின் தொகை 10,000 தொடங்கி 40,000 வரை இருக்கும் என அவர் கூறும் செய்தி நம்மை நெஞ்சை உறையச் செய்கிறது.

''இந்தப்போரின் கடைசி நேரத்தில் சற்றேறக்குறைய 3 லட்சம் பொதுமக்களும், போராளிகளும் நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் அளவே உள்ள சிறிய பகுதிக்குள் முடக்கப்பட்டனர் என தெரிவித்த அவர், போரின் போது புலிகளை அடிப்பதற்காக சிறிய மற்றும் பலம் வாய்ந்த கருவிகள் தாக்கும் எல்லைக்குள்ளேயே அவர்கள் முடக்கப்பட்டார்கள் என்றும் இந்தநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உடல் சிதறி இறந்தார்கள்" எனவும் அவர் கூறுகிறார்.

இந்த தகவல் எந்த நிலையிலும் போராளிகளிடமோ, அல்லது பொதுமக்களிடம் இருந்தோ நாம் பெறவில்லை என்றும், இது போர் நடந்தபோது அங்கே இருந்த பார்வையாளர்கள் கொடுத்த தகவல்கள் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு அனைத்துலக நாடுகளை தமது தவறான வழிக்காட்டுதலால் நடத்திச் சென்றது. இதன் காரணமாகவே இப்படிப்பட்ட ஒரு பேரழிவை அம்மக்கள் சந்தித்தார்கள். ஆனால் திட்டமிட்டே இறந்த மக்களின் தொகையை மிகக் குறைத்து சிங்கள இனவாத அரசு கூறுகிறது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது நமக்கு அதிர்ச்சிக்குரிய தகவல் மட்டுமல்ல, நம்மை எழுச்சிக் கொள்ள வைக்கும் தகவலும் கூட. நம்மை முடக்கிப்போடும் தகவல் அல்ல. நம்மை முன்னேறத் தூண்டும் தகவலாக இது இருக்கிறது. காரணம் நாம் மாவோ கதையில் கேட்டதைப் போல உளி கொண்டு தொடர்ந்து செதுக்கிக் கொண்டுதான் இருக்கப் போகிறோம். இது, நமக்கான நாடு அமையும்வரை மாறப்போவது கிடையாது.

எம்மின மக்களுக்கு எமது எண்ணங்களையும், எழுச்சி நிறைந்த வார்த்தைகளையும் தொடர்ந்து தருவதிலே நாம் களத்திலிருக்கப்போகிறோம். எந்த நிலையிலும் விழமாட்டோம் என்கின்ற உயரிய லட்சியம் அவர்களுக்குள் எழுச்சியோடு வளர வேண்டும். இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலிருக்கும் எம்மின உறவுகளுக்கெல்லாம் லியூயாசி என்கின்ற சீனத்துக் கவிஞர் எழுதிய இந்த கவிதை வரிகளை மீண்டும் நினைவுப்படுத்துகின்றோம்.

என் இதயம் உண்மையில் நிரம்பிவழிகிறது.
கடந்த காலத்திற்காக வருந்தமாட்டேன்.
ஓ! தெற்கிலிருந்தும் வெற்றி செய்தி வருகிறது.
என் ஊரும், பழக்கமான ஏரியும் தான்
என் உறைவிடம், ஒரு தவப்பீடம்.
என்னை நீங்கள் இருகரம் நீட்டி வரவேற்றாலும்
நெடுநாள் அங்கே தங்கமாட்டேன்.
வீணாகி விட்டன என் வாழ்நாட்கள்
மெத்த வருந்துகிறேன் அதற்காக.


ஆம்! எம் இனிய உறவுகளே! நாம் நமது சொந்த மண்ணில் தலைசாய்த்து, அந்த காற்று பாடும் தாலாட்டை கேட்டு கண்ணுறங்கும் நாள்தான் நம்முடைய வாழ்நாளின் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். எப்போதும் தோற்றுப்போக நாம் பிறக்கவில்லை. வெற்றிப் பெறவே பிறந்திருக்கிறோம். அதற்காக நம்மை நாம் அர்ப்பணிக்கப்போகிறோம். ஆற்றலோடு களம் அமைக்கப் போகிறோம். எதற்கும் அஞ்சாமல் சமர் செய்யப் போகிறோம். ஏனெனில் நமக்கான ஒரு இலட்சியம் உண்டு.

நாம் எல்லோருக்குமான ஒரு கனவு உண்டு. அது தமிழீழம். நம் சொந்த நாடு. நம் தாய்நாடு. தாய் மடியிலே உண்டு, உறங்கி எழுவதிலிருக்கும் உண்மை மகிழ்ச்சி எந்நிலையிலும் அந்நிய மடியில் நமக்கு கிடைக்கப் போவதில்லை. அதற்காக எந்நிலையிலும் நம்மை நாம் தயாராய் வைத்துக் கொள்வோம். அதற்காக நம்மை நாம் தயாரிப்போம். நமக்கான ஒரு நாடு அமையும்போது என்ன செய்ய வேண்டும் என்று நாம் திட்டமிடுவோம். காரணம் நமது பயணம் இதோ விரைவில் முடிய இருக்கிறது. அந்த முடிவு நம்மை முடிவில்லா மகிழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறது. அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்வோம். தோழர் மாவோ சொல்லியதைப் போல,

நாம் மீண்டும் எழுவோம்.
ரத்தத்தை துடைத்துக் கொள்வோம்.
வீழ்ந்த தோழர்களை புதைப்போம்.
மீண்டும் போருக்கு செல்வோம்.

தெருவில் கிடக்கும் தமிழன்


தமிழன் -நான் அதனாலேயே தலை குனிந்து போகவேண்டியவன் நான்... குண்டுச் சத்தமே தாலாட்டு என்றெண்ணிய எங்கள் குழந்தைகள் தாயின் தாலாட்டை நிராகரிக்கின்றன... வீடு கட்டி விளையாடச் சொன்னால் இல்லை இல்லை அகதிமுகாம் கட்டியே விளையாடுவோம் என்றே.
..
அடம் பிடிக்கின்றன
எங்கள்
குழந்தைகள்...
அகதி முகாமிலேயே
வாழப் பழகிய
எங்கள் குழந்தைகளுக்கு
அந்நியமாகிப்
போனது வீடு


சிரிப்பது என்றால்
என்ன அம்மா?
என்கிறது ....
மூன்று வயதாகியும்
இன்னும்
சிரிக்கச் சந்தர்ப்பம்
கிடைக்காத
ஒரு குழந்தை...


மூன்று வேளையும்
சாப்பாட்டுக்குப்
பிறகு..
என்று வைத்தியர்
கொடுத்த
மருந்தை
ஒருவேளை மட்டுமே
சாப்பிடும்
குழந்தைக்கு
எப்படிக்
கொடுப்பதாம் ...?


பாலே இல்லாமல்
செத்துப் போன
குழந்தைகளுக்கு
பால் ஊற்றுவது
எப்படி..


எட்டு வயதைக்கூட
எட்டிப் பிடிக்க
முடியாமல்
எங்கள்
குழந்தைகள்
செத்துப் போக
சிலபேர்..
வெட்கமில்லாமல்
எண்பத்தாறு
வயதையும்....
பார்ட்டி போட்டு
கொண்டாடுகிறார்கள்..


போட்ட
குண்டுச் சத்தம்
போதாதென்று...
சிலர்
வெற்றியை
பட்டாசு சத்தம்
கேட்டுக்
கொண்டாடுகிறார்கள்....

மரணத்தின்
அவசரம் புரியாமல்
தொலைபேசி இருக்க
கடிதமும்
தந்தியும்
அனுப்பிய...
முட்டாள்கள்
நாங்கள்...


மிருகக்காட்சி
சாலைக்குள்
இருக்கும்
மிருகங்கள் கூட
சிலவேளைகளில்
வெளியே வரும்....
முட்கம்பிக்குள்
இருக்கும்
எங்கள் மக்கள்
எப்போது
வெளியே
வருவார்கள்....?
தயவு செய்து பதில் சொல்லுங்கள்.......................................................................