
இறைவன் இருக்கிறானா
மனிதன் கேட்கின்றான்
இறைவனைத் தான் நாம்
சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோமே
மதங்கள் என்ற பெயரால்
இன்னும் அவனை கூறு போடுகிறோம்
இறைவனை
நம் அசிங்க சந்தைகளில்
தரகனாகி
நம் ஆபாச மனஉணர்வுகளை சித்தரிக்கும்
நடிகனாகி
நம் குப்பைகளை எல்லாம் கொட்டும்
குப்பை தொட்டியாகி
பல வழிகளில் பல முறை
அவனை கொன்று விட்டோமே
இறைவன் படைத்தது
ஒரு மனிதனை
இந்த மதங்கள் படைத்தது
பல கடவுள்களை
அந்த கடவுள்களுக்கு இடையிலும்
யார் உயர்ந்தவன் என்ற போட்டி
அவர்களையே மோத விட்டு
வேடிக்கை பார்ப்பவன் மனிதன்
மதங்கள் மனிதனுக்கு ஒரு
சாபக்கேடு இங்கே
மதம் படித்தவர்களை விட
மதம் பிடித்தவர்களே அதிகம்
மதங்கள் சமாதனப் புறாக்கள் என்றால்
அதன் கால்களில்
மாமிச துண்டுகள் ஏன்
அதன் சொண்டுகளில்
இரத்தம் சொட்டுவது ஏன்
மதங்கள் அமுதக் கலசங்கள் என்றால்
அதில் ஆலகால விஷம்
பொங்குவது ஏன்
ஏமாறும் பசுக்களை
ஏமாற்றும் வைக்கோல் கன்றுகளாக
இன்றைய மதங்கள்
No comments:
Post a Comment